ADDED : பிப் 02, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் சந்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.
தை செவ்வாய் கிழமையை முன்னிட்டு பிருந்தாவன தோப்பில் இருந்து முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில், கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலமாக எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு , பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

