/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுரை பயணி தவற விட்ட நகை, அலைபேசிகள் மீட்பு
/
மதுரை பயணி தவற விட்ட நகை, அலைபேசிகள் மீட்பு
ADDED : ஜன 22, 2024 11:29 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை பயணி ராம்பிரசாத்குமார் 35, தவற விட்ட நகைகள், அலைபேசிகளை ரயில்வே போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை திருநகர் சீனிவாசகாலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராம்பிரசாத்குமார். நேற்று முன் தினம் பணி காரணமாக சேலத்திற்கு சென்ற ராம்பிரசாத்குமார் நேற்று ரயில் மூலம் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். 2 வது பிளாட்பாரத்தில் மதுரை ரயிலுக்காக காத்திருந்தவர் சாப்பிட தான் கொண்டு வந்த பேக்கை பிளாட்பாரத்தில் வைத்துள்ளார். சாப்பிட்ட பின் பேக்கை மறந்து விட்டு ரயிலில் ஏறி மதுரை சென்றார்.
ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.ஐ., அருணோதயம், போலீஸ்காரர் ராஜேஷ்குமார் பிளாட்பார ரோந்து பணியில் ஈடுபட்ட போது பேக்கை சோதனையிட்டனர். அதில் 2 பவுன் செயின், ஒன்றரை பவுன் மோதிரம், 2 அலைபேசிகள், பர்ஸ் இருந்தது.
அதிலிருந்த அலைபேசி எண்ணில் போலீசார் தொடர்பு கொண்ட போது ராம்பிரசாத்குமார் மனைவி நந்தினி பேசினார். பிறகு ராம்பிரசாத்குமாரை வரவழைத்து போலீசார் நகை, அலைபேசிகளை ஒப்படைத்தனர்.

