sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

/

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு


ADDED : செப் 25, 2025 02:18 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், உலக இருதய தினத்தை முன்னிட்டு, 'இருதயத்தின் துடிப்பை இழக்காதீர்கள்' என்ற தலைப்பில் இருதய சிகிச்சைக்கு பின் வாழ்வியல் முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் நல்லா பழனிசாமி தலைமை கித்து பேசுகையில்,'' ஒரு காலத்தில் இருதய சிகிச்சை அமெரிக்கா போன்ற நாடுகளில், செல்வந்தர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, ஒருங்கிணைந்த இருதய சிகிச்சைக்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கேத்லேப் வசதியை நிறுவி, முழுநேர இருதய சிகிச்சை சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது,'' என்றார். பிவிபி பள்ளி தாளாளர் டாக்டர் ராம

கிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.

இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ராகவேந்திரன் பேசுகையில், '' தற்போதைய மருத்துவ வளர்ச்சி காரணமாக, பிற அறுவை சிகிச்சை போலவே பைபாஸ் அறுவை சிகிச்சையும் பாதுகாப்பான ஒன்றாக உள்ளது. கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில், 10 ஆண்டுகளில், 3,000க்கும் அதிகமான இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

பெரு நகர மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உள்ளது,'' என்றார்.முன்னதாக மருத்துவர் தேவிமீனா பிரபு வரவேற்றார். நிறைவில், மருத்துவ இயக்குனர் டாக்டர் மோகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us
      Arattai