/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,
/
ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,
ADDED : செப் 20, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், கையெழுத்து இயக்கம் மூலப்பாளையம் அருகே நடந்தது. காங்., எம்.பி., ராகுல் சுட்டிக்காட்டியபடி 'ஓட்டுத்திருட்டை தடுப்போம்; நமது வாக்குரிமையை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கையெழுத்து பெற்றனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, மாவட்ட துணை தலைவர் சிவகுமார், வட்டார தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

