sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 52வது வார்டில் குடிநீர் குழாயில் வந்த கழிவு நீர்

/

மாநகராட்சி 52வது வார்டில் குடிநீர் குழாயில் வந்த கழிவு நீர்

மாநகராட்சி 52வது வார்டில் குடிநீர் குழாயில் வந்த கழிவு நீர்

மாநகராட்சி 52வது வார்டில் குடிநீர் குழாயில் வந்த கழிவு நீர்


ADDED : ஜன 19, 2024 11:50 AM

Google News

ADDED : ஜன 19, 2024 11:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 52வது வார்டுக்கு உட்பட்ட பொய்யேரிக்கரை வீதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி குடிநீர் குழாய்களில் கரும் நிறத்தில், துர்நாற்றத்துடன், சாக்கடை கழிவுநீர் வந்ததால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ஒரு வாரத்துக்கு முன் இப்பகுதியில், குடிநீர் குழாய்களை சரி செய்ய, மாநகராட்சி ஊழியர்கள் குழி தோண்டினர். அதன் அருகிலேயே கழிவு நீர் கால்வாய் செல்வதால், அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடிநீர் குழாயில் வருகிறது. கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு கூறினர்.

இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சாந்தி கூறியதாவது: குடிநீர் குழாயில் சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. குழாயை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் தெரிவித்தனர். குடிநீர் ஆப்பரேட்டர்களிடம் தெரிவித்துள்ளேன். உடனடியாக சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us