/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு
/
பெண்ணைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு
ADDED : ஜன 24, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே இடம் தகராறில் பெண் ணைத் தாக்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த காட்டு எடையார் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 41; இவரது தம்பி கண்ணன், 34; இருவருக்கும் இடையே இடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி இரவு 7:00 மணிக்கு கண்ணன், அவரது மனைவி கவிதா ஆகியோர் சங்கரின் மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீ சார் கண்ணன், கவிதா ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

