/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
/
மாணவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
ADDED : பிப் 02, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் மகன் ஸ்ரீபதி, 20; சடையம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் கல்லுாரி முடிந்து தனது நண்பருடன் ஸ்ரீபதி வெளியே வந்துள்ளார். அப்போது வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகன் அய்யனார், 20; ஸ்ரீபதியுடன் தகராறு செய்து தாக்கினார்.
இது குறித்த புகாரின்பேரில், அய்யனார் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

