sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கார் டயர் வெடித்து விபத்து போலீஸ்காரர், மனைவி பலி உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்

/

கார் டயர் வெடித்து விபத்து போலீஸ்காரர், மனைவி பலி உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்

கார் டயர் வெடித்து விபத்து போலீஸ்காரர், மனைவி பலி உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்

கார் டயர் வெடித்து விபத்து போலீஸ்காரர், மனைவி பலி உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்


ADDED : ஜன 23, 2024 05:27 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, கார் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் சாலையில் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தம்பதி இறந்தனர்.

சென்னை, தாம்பரம், மணிகண்டன் நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலமுருகன், 32; தாம்பரம் சிட்டி, சங்கர் நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வினோதினி, 30.

இருவரும், கரூரில் உள்ள வினோதினியின் தாய் வீட்டிற்குச் சென்று விட்டு, 'போர்டு ஐகான் ஸ்போர்ட்' காரில் நேற்று முன்தினம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

இரவு 10:30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்தபோது, காரின் வலது முன் பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசை சாலையை நோக்கி பாய்ந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற 'பார்ச்சூனர்' கார் மீது மோதியது.

இந்த விபத்தில் பாலமுருகன், வினோதினி மற்றும் பார்ச்சூனர் காரில் வந்த திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 42; அவரது மனைவி வித்யா, 34; பாலசுப்ரமணியன்,.67‍; பராசக்தி, 48; ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடன், படுகாயம் 6 பேரையும் அப்பகுதியினர் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு நள்ளிரவு 12:30 மணியளவில் பாலமுருகன், வினோதினி இறந்தனர். காரில் ஏர் பலுான் விரிந்தும் இருவரும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us