sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

13ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

/

13ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

13ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

13ம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்


ADDED : மே 10, 2025 12:54 AM

Google News

ADDED : மே 10, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 13ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது.

இதில், மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு, 1000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

என்.சி.வி.டி., மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் 'பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக' சேர்ந்து, 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

இந்த பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.8,500 முதல் ரூ.12,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், 04146-294989 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us