ADDED : மார் 25, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் இளையனார்குப்பம் ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சேகர், 47; மற்றும் பிரம்மகுண்டம் ஏழுமலை ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும் ஏழுமலை தப்பியோடி விட்டார்.
சேகரை, போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.