ADDED : ஜன 19, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : அத்தியூரில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாணாபுரம் அடுத்த அத்தியூர் சந்தைமேடு அருகே அடையாள தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த முதியவரின் உடலை மீட்டு விசாரித்தனர்.
அதில், இறந்த முதியவர், ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் மகன் கணேசன், 60; என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

