sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பயனாளிகளுக்கு அரசு திட்டங்கள் : கலெக்டர் அறிவுறுத்தல்

/

பயனாளிகளுக்கு அரசு திட்டங்கள் : கலெக்டர் அறிவுறுத்தல்

பயனாளிகளுக்கு அரசு திட்டங்கள் : கலெக்டர் அறிவுறுத்தல்

பயனாளிகளுக்கு அரசு திட்டங்கள் : கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : ஜூன் 27, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:மாவட்டத்தில் அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை அலுவலர்கள் உறுதி செய்ய கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மலையரசன் எம்.பி., தலைமை தாங்கினார்.

கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். ரவிக்குமார் எம்.பி., மணிகண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டம், தேசிய நலக்குழுமம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கேலோ இந்தியா, ஒருங்கிணைந்த சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை, திட்டங்கள் செயல்படுத்தும் முறைகள், செம்மைப்படுத்துதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.

தொடர்ந்து, மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்; திட்டங்கள் குறித்து பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; என அறிவுறுத்தப்பட்டது. இதில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us