
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார், தில்லை கோவிந்தராஜ பெருமாள் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். திருக்கல்யாண வைபவம் குறித்து தேசிக பட்டர் பக்தர்களுக்கு விளக்கினார்.
தொடர்ந்து விஷ்வக் சேனர் வழிபாடு, அங்குரார்பனம் யாகம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சின்னசேலம்
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரங்க மன்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரமும், தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
அதேபோல் சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது.

