sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பட்டா மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

/

பட்டா மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


ADDED : செப் 25, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பட்டா மாற்றத்திற்கு 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன், 50; புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டுமனைக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, புத்திராம்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அங்கு வி.ஏ.ஓ.,வாக பணிபுரியும் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த கோமதி, 38; பட்டா மாற்றத்திற்கு பொன்னையனிடம் 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து, பொன்னையன் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 4000 ரூபாயை, அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ., கோமதியிடம் பொன்னையன் கொடுத்தார். அங்கு கண்காணிப்பிலிருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் போலீசார், கோமதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai