sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது? இடம் தேர்வு செய்து இரண்டரை ஆண்டு கடந்தும் கிடப்பில்

/

கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது? இடம் தேர்வு செய்து இரண்டரை ஆண்டு கடந்தும் கிடப்பில்

கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது? இடம் தேர்வு செய்து இரண்டரை ஆண்டு கடந்தும் கிடப்பில்

கள்ளக்குறிச்சி மாவட்ட நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது? இடம் தேர்வு செய்து இரண்டரை ஆண்டு கடந்தும் கிடப்பில்


ADDED : செப் 17, 2025 12:34 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மாவட்ட நுாலகம் கட்ட 3 இடங்கள் தேர்வு செய்தும், இதுவரை கட்டட பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே வாடகை கட்டடத்தில் கடந்த 1957ம் ஆண்டு நுாலகம் துவங்கப்பட்டது. 30 ஆண்டுகள் வரை வ.உ.சி., நகரில் இயங்கி வந்த நுாலகம், விளாந்தாங்கல் சாலையில் வேறு ஒரு வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்பின் காந்தி ரோடு பகுதியில் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு, 50,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஜெராக்ஸ் மிஷின், இன்டர்நெட், பிரிண்டருடன் கூடிய கணினி வசதி உள்ளது. இந்த நுாலகத்தில் 7,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர்.

கள்ளக்குறிச்சியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம கிளை நுாலகங்களுக்கு மாதாந்திர செலவின தொகை வழங்கும் ஊதிய மையமாக மாவட்ட நுாலகம் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு, இந்த கள்ளக்குறிச்சி நுாலகத்திற்கென தனி கட்டடம் கட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நேப்பால் தெருவில் ஏரிக்கரை ஓரமாக 15 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் நுாலகத்திற்கான கட்டடம் கட்டப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 2019 ம் ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியுடன் சேர்த்து புதிதாக துவக்கப்பட்ட மாவட்டங்களில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக கட்டட வடிவமைப்பில் 6 மாடிகளுடன கூடிய மாவட்ட நுாலகம் கட்டுவதற்கு நுாலக துறை சார்பில் தலா ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கள்ளக்குறிச்சியில் நுாலகம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்படாமல் பல ஆண்டுகள் காலம் கடத்தப்பட்டதால் நுாலகம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டி வந்ததால், கடந்த 2023ம் ஆண்டு துவக்கத்தில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான 40 சென்ட் இடத்தை பொது நுாலகத் துறைக்கு மாற்றம் செய்து அப்போதைய கலெக்டர் உத்தரவிட்டார். அந்த இடம் மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி மற்றும் நுாலகர்கள் ஆனந்தகுமார், தர்மலிங்கம் ஆகியோர் உதவியுடன் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென அளவீட்டு பணியுடன், நுாலகம் கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டதால், கடந்த 2023ம் மே மாதம் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் கட்டடம் பகுதியில் 38 சென்ட் இடத்தை மாவட்ட நுாலகத்திற்கென ஒதுக்கீடு செய்து கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். இடம் ஒதுக்கி இரண்டரை ஆண்டுகள் கடந்தும் அங்கும் நுாலகம் கட்டடம் கட்ட இதுவரை பணிகள் துவங்கவில்லை.

கள்ளக்குறிச்சியில் கடந்த 68 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நுாலகத்திற்கு, புதிதாக கட்டடம் கட்ட 3 இடங்கள் தேர்வு செய்தும், இதுவரை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது இப்பகுதி மாணவர்கள், வாசகர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us