sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

'போக்சோ'வில் கைதான வாலிபர் தற்கொலை

/

'போக்சோ'வில் கைதான வாலிபர் தற்கொலை

'போக்சோ'வில் கைதான வாலிபர் தற்கொலை

'போக்சோ'வில் கைதான வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 23, 2024 05:00 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே 'போக்சோ' வழக்கில் கைதான வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கருணாகரன், 23; 10ம் வகுப்பு வரை படித்த இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

கருணாகரன் சிறுமியை காதலித்து வந்தவர், சில மாதங்களுக்கு முன் அவரை கடத்தி சென்றார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெண் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து கருணாகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கடந்த நவம்பர் மாதம் ஜாமினில் வெளிவந்த கருணாகரன் தினமும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மதியம் 2 மணியளவில் வீட்டை விட்டு சென்ற கருணாகரன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கண்டாச்சிமங்களம் மணிமுக்தா ஆற்றங்கரை பகுதியில் உள்ள மரத்தில் கருணாகரன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, கருணாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us