/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மதிய நேர பஸ் சேவை அரும்புலியூருக்கு நிறுத்தம்
/
மதிய நேர பஸ் சேவை அரும்புலியூருக்கு நிறுத்தம்
ADDED : பிப் 01, 2024 11:13 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத், பழையசீவரம், திருமுக்கூடல் வழியாக தடம் எண்: டி55ஏ என்ற அரசு பேருந்து அரும்புலியூர் வரை இயக்கப்படுகிறது.
இப்பேருந்து நாளொன்றுக்கு மூன்று முறை இயங்கி வந்தது. இந்நிலையில், மதியம் 12:30 மணிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு, 1:30 மணிக்கு அரும்புலியூர் பகுதிக்கு வந்தடையும் பேருந்து சேவையை, ஆறு மாதங்களாக அறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், மதிய நேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து, அரும்புலியூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணிக்க பேருந்து வசதி இல்லாமல் கிராமத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, நிறுத்தம் செய்த மதிய நேர பேருந்து சேவையை மீண்டும் இயக்க, அரும்புலியூர் உள்ளிட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

