sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிளாம்பாக்கம் பஸ் முனையம் பயணியரின்றி வெறிச் புறநகர் ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணியர் கூட்டம்

/

கிளாம்பாக்கம் பஸ் முனையம் பயணியரின்றி வெறிச் புறநகர் ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணியர் கூட்டம்

கிளாம்பாக்கம் பஸ் முனையம் பயணியரின்றி வெறிச் புறநகர் ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணியர் கூட்டம்

கிளாம்பாக்கம் பஸ் முனையம் பயணியரின்றி வெறிச் புறநகர் ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணியர் கூட்டம்


ADDED : ஜன 19, 2024 12:31 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் பண்டிகை விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றோர், இரண்டு நாட்களாக சென்னைக்கு திரும்பி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் அரசு விரைவு பேருந்துகள், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வரும் கோட்ட பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நேற்று இயக்கப்பட்டன.

ஒரே நேரத்தில் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் பயணியர் வந்ததால், முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் நிலையத்திற்குள் செல்லாமல், ஜி.எஸ்.டி., சாலையிலேயே பயணியரை இறக்கிவிட்டு, கோயம்பேடு வரை இயக்கப்பட்டதால், பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பெருங்களத்துார், தாம்பரம், கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட பல முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறினர்.

வெளியூர்களில் இருந்து வந்து கிளாம்பாக்கம் - தாம்பரம் தடத்தில் பல்வேறு இடங்களில் இறங்கியோர், போதிய பேருந்து கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

வெளியூர்களில் இருந்து வந்த பெரும்பாலானோர், நெரிசலில் சிக்காமல் இருக்க, புறநகர் ரயில் நிலைய பகுதிகளில் இறங்கி, அங்கிருந்து ரயில்கள் வாயிலாக தங்கள் இடங்களுக்கு சென்றனர்.

குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பொத்தேரி, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்துார் உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் புறநகர் ரயில் வாயிலாக, சென்னை நகருக்குள் பல்வேறு இடங்களுக்கு சென்றடைந்தனர்.

அம்பத்துார், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணியர், கிளாம்பாக்கம் நிலையம் சென்று, அங்கிருந்து மாநகர பேருந்துகள் வாயிலாக சென்றனர்.

கிளாம்பாக்கத்திற்குள், சொற்ப பயணியருடனே அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்தன.

அங்கு, உணவகம் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் பயணியர் அவதிப்பட்டனர்.

இது குறித்து நெல்லையைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறியதாவது:

திருநெல்வேலியில் இருந்து கிளம்பிய அரசு விரைவு பேருந்தில் அனைத்து இருக்கைகளிலும் பயணியர் இருந்தனர்.

செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி என, அடுத்தடுத்த ரயில் நிலைய பகுதிகளில் பயணியர் இறங்கினர்.

ஐந்து பயணியர் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினோம். இங்கு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஆவின் பாலகம் மற்றும் ஒரு ஹோட்டல் மட்டுமே திறந்திருந்தன. வளாகத்திற்குள் ஏ.டி.எம்., மையம் இல்லை. இதனால் மிகுந்த அலைச்சல் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில், பயணியர் வசதிக்காக வழக்கத்தைவிட கூடுதலாக 250 பேருந்துகள் 400 நடைகளாக இயக்கப்பட்டன.

கிளாம்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்த சென்னைக்கு செல்ல நேரம் விரயமாகும்.

ஆம்னி பேருந்தில் வந்ததால், கோயம்பேடுக்கு அதிகாலை வந்துவிட்டோம். இதனால், என் கணவர், அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியும். கிளாம்பாக்கம் சென்று, அங்கிருந்து வேறு பேருந்து பிடித்து வந்திருந்தால், கணவர் வேலைக்கு செல்ல தாமதமாயிருக்கும்.

எம்.அர்ஷினி, 32, -

நெல்லை



போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, புதிய பேருந்து நிலையம் உருவாக்கியது நல்லது. அதேநேரம், பயணியர் சிரமத்தை குறைக்கும் வகையில், அரசு யோசித்திருக்க வேண்டும். விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போதே, கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் வகையில் இணைப்பு பேருந்துக்கான முன்பதிவு வசதியையும் ஏற்படுத்தி, அதற்கென தனி பேருந்து இயக்கியிருந்தால், மக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்காது.



ஜெ.தினேஷ், 42,

வடபழநி.



அவகாசம் கேட்கும் ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள்


'ஆம்னி பேருந்துகள், வரும் 24ம் தேதி நள்ளிரவு முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்க வேண்டும். பயணியரை, இங்கிருந்து தான் அழைத்துச் செல்ல வேண்டும். பயணியருடன், சென்னை மாநகரின் உள்ளே ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது' என, போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கோரியுள்ளனர்.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில், 100 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதியே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களிடம் தினமும் இயக்கக்கூடிய 800க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் உள்ளன. அங்குள்ள இடம் எங்களுக்கு போதாது.முடிச்சூர் - வரதராஜபுரம் பகுதியில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய நிறுத்தும் இடம் பணிகள் முடிந்தால் மட்டுமே எங்களால், ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.
எனவே, இந்த பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் வரையில், சென்னை கோயம்பேடு வரை வழக்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இது குறித்து தலைமை செயலர் மற்றும் போக்குவரத்து துறை செயலரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us