/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செரப்பனஞ்சேரியில் மின் அலுவலகம் திறப்பு
/
செரப்பனஞ்சேரியில் மின் அலுவலகம் திறப்பு
ADDED : செப் 26, 2025 03:56 AM

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட, நாவலுார் பிரிவு அலுவலகத்திற்கு, செரப்பனஞ்சேரியில் புதிதாக மின் உதவி பொறியாளர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
மறைமலை நகர் மின் கோட்டத்தின் கீழ், படப்பை மின் உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில், செரப்பனஞ்சேரி, நாவலுார், வஞ்சுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் புதிதாக வீடுகட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகாரித்து வருகிறது.
இதனால், இப்பகுதிகளில் ஏற்படும் மின் வினியோகம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
அதேபோல, இப்பகுதி மக்கள் 10 கிலோ மீட்டர் துாரம் கரசங்கால் பகுதியில் அமைந்துள்ள படப்பை மின் உதவி பொறியாளர் அலுவகத்திற்கு, மின் கட்டணம் செலுத்த செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதையடுத்து, படப்பை மின் உதவி பொறியாளர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து, நாவலுார் மின் உதவி பொறியாளர் அலுவலகம் புதிதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில், நாவலுார் மின் உதவி பொறியாளர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன் பங்கேற்று, புதிய உதவி பொறியாளர் அலுவகத்தை திறந்து வைத்தார்.
இதில், செங்கல்பட்டு மின் மேற்பார்வை பொறியாளர் அன்புசெல்வன், செயற்பொறியாளர் மாணிக்கவேலன், உதவி செயற்பொறியாளர்கள் வெங்கடேசன், ஸ்ரீதர், உதவி பொறியாளர்கள் எல்லப்பன், சங்கர், சசிகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கணினி மற்றும் இன்டர்நெட் இணைப்பு பணிகள் மீதமுள்ள நிலையில், அக்., முதல் வாரம் முதல், அலுவலகம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.