/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
சேதமடைந்த ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
சேதமடைந்த ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
சேதமடைந்த ஏரி கலங்கல் சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:28 AM

உத்திரமேரூர்:திருமுக்கூடல் ஏரியின் கலங்கல் சேதமடைந்து உள்ளதையடுத்து, சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 120 ஏக்கர் பரப்பளவு உடையது. மழை நேரங்களில் ஏரி முழுதுமாக நிரம்பும்போது, 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், மழை நேரங்களில் ஏரி முழுதுமாக நிரம்பும் போது, உபரி நீரை வெளியேற்ற கலங்கல் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, கலங்கல் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது.
இதனால், ஏரியில் சேமிக்கப்படும் நீரானது, உடைந்த கலங்கல் வழியே வெளியேறி வீணாகிறது.
இந்த கலங்கல் சேதமடைந்து உள்ளதால், தண்ணீர் வீணாக வெளியேறி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் கேள்விக்குறியாகி வருகிறது.
மேலும், கலங்கல் பகுதியில், புற்கள் மற்றும் பனை மரங்கள் வளர்ந்து உள்ளதால், உபரி நீர் தடையின்றி வெளியேற முடியாத நிலை உள்ளது.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன், ஏரி கலங்கலை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.