ADDED : ஜன 21, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு : நெற்குன்றம் செல்லி அம்மன் நகரை சேர்ந்தவர், கமல் கான் மாலிக், 35. இவர் கோயம்பேடு காய்கறி சந்தையில், வாடகைக்கு கடை எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை அவரது கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், கடையின் உள்ளே துாங்கி கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து ஜெ.ஜெ., நகர் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், கடை முழுதும் தீ பரவியது. தீயை அணைத்து, தீயணைப்பு வீரர்கள் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோயம்பேடு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

