sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் ஆன்மிக சுற்றுலா மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்

/

காஞ்சியில் ஆன்மிக சுற்றுலா மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்

காஞ்சியில் ஆன்மிக சுற்றுலா மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்

காஞ்சியில் ஆன்மிக சுற்றுலா மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்


ADDED : செப் 21, 2025 01:13 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூத்த குடிமக்களை, வைணவ கோவில்களுக்கு இலவசமாக அழைத்து செல்லும் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா பேருந்தை காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், முக்கிய வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், 60 - 70 வயதிற்கு உட்பட்ட 1,000 மூத்த குடிமக்களை இலவசமாக உணவு உட்பட ஆன்மிக பயணத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டம், கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டது.

அதன்படி, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் வைணவ கோவில்களுக்கான ஒருநாள் ஆன்மிக பயணம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துவங்கியது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள் 50 பேருக்கு குடிநீர், உணவு, சுவாமி படம், கோவில் பிரசாதங்கள் அடங்கிய மஞ்சள்பை தொகுப்பை காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி வழங்கினார். ஆன்மிக சுற்றுலா பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பாண்டவ துாதப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் என, ஐந்து வைணவ கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் ஜெயா, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us