sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

லாரியில் இருந்து சிதறும் ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

லாரியில் இருந்து சிதறும் ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

லாரியில் இருந்து சிதறும் ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

லாரியில் இருந்து சிதறும் ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூன் 28, 2025 01:47 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:அளவிற்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் லாரியில் இருந்து சாலையில் சிதறும் ஜல்லி கற்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை வழியே, ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், புதிதாக தொழிற்சாலை மற்றும் வீடு கட்டுமான பணிக்காக, ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான லாரிகள் தினமும் சென்று வருகின்றன.

அவ்வாறு செல்லும் லாரிகளில், வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி செல்வதால், லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், சாலையில் சிதறி விழுகிறது.

இதனால், இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லி கற்கள் மீது செல்லும் போது, இடறிவிழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சாலையில் சிதறியுள்ள ஜல்லி கற்கள் குவியலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us