sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

/

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


ADDED : செப் 21, 2025 12:42 AM

Google News

ADDED : செப் 21, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள, காஞ்சிபுரம் ஓரிக்கை, சின்ன அய்யங்குளம் காலனி சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு மேம்பாலம் அருகே இருந்து, மிலிட்டரி சாலை, அண்ணா குடியிருப்பு, தாண்டவராயன் நகர், ஓரிக்கை பழைய காலனி, திருவேகம்பன் நகர், அரசு ஆதிதிராவிடர் பள்ளி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், சின்ன அய்யங்குளம் காலனி சாலை வழியாக சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், கட்டுமான பணிக்கு செங்கல், எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளால், ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி அருகே, 100 மீட்டர் நீளத்திற்கு மேல், ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து பல்லாங்குழியாக சாலை மாறியுள்ளது.

சாலை சேதமடைந்த பகுதியில் எட்டு போன்ற வடிவில், மழைநீரும் குட்டை போல தேங்குவதால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள ஓரிக்கை சின்ன அய்யங்குளம் காலனி சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us