sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் குளக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம்

/

கோவில் குளக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம்

கோவில் குளக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம்

கோவில் குளக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம்


ADDED : செப் 22, 2025 12:59 AM

Google News

ADDED : செப் 22, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:மஹாளய அமாவாசையான நேற்று, கோவில் குளக்கரைகளில், ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை தினம், முன்னோரை ஆராதிப்பதற்காக, தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக கருதப்படுகிறது.

அதன்படி, மஹாளய அமாவாசையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோவில் குளம், தாயார் குளம் உள்ளிட்ட கோவில் குளங்களில், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக, காலை 6:00 மணியில் இருந்தே குவிந்தனர்.

இதனால், கூட்டம் அலைமோதியது.

நீண்ட வரிசையில் காத்திருந்து, புரோஹிதர் மந்திரம் ஓத, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாக வழங்கினர்.

திருப்புட்குழி: திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, பறவைகளின் அரசனாக விளங்கும் ஜடாயுவிற்கு, ராமர் ஈமக்கிரியை செய்ததால், ஜடாயு தீர்த்த குளம் என, அழைக்கப்படுகிறது.

இங்கு, நேற்று, மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து, ஜடாயு தீர்த்த குளத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us