sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இருக்கை வசதி இல்லாத நிழற்குடை பயணியர் தரையில் அமரும் அவலம்

/

இருக்கை வசதி இல்லாத நிழற்குடை பயணியர் தரையில் அமரும் அவலம்

இருக்கை வசதி இல்லாத நிழற்குடை பயணியர் தரையில் அமரும் அவலம்

இருக்கை வசதி இல்லாத நிழற்குடை பயணியர் தரையில் அமரும் அவலம்


ADDED : ஜன 18, 2024 09:19 PM

Google News

ADDED : ஜன 18, 2024 09:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆலடி தோப்பு பகுதியில், கீழ்கேட் பேருந்து நிறுத்தத்தில், 2007- - 08ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் செலவில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் வழித்தடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்தில் பயணிக்கும் பயணியர், தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பேருந்து வரும் வரை, நிழற்குடையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பயணியர் நிழற்குடையில் அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் பலகை இருக்கைகள் சேதமடைந்துவிட்டன. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நீண்ட நேரம் நிற்க முடியாமல், தரையில் அமர வேண்டிய அவல நிலை உள்ளது.

எனவே, சேதமடைந்த நிழற்குடையை புதுப்பித்து இருக்கை வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us