sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாலத்தின் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு

/

பாலத்தின் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு

பாலத்தின் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு

பாலத்தின் சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் உறுதித்தன்மை பாதிப்பு


ADDED : ஜூன் 26, 2025 12:25 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:மணல்மேடு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அரச செடிகள் வளர்ந்துள்ளதால் அதன் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் நெடுஞ்சாலை, மணல்மேடு பகுதியில் ஓடை கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியே தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

தற்போது, பாலம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அரச செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், செடிகளின் வேர்கள் பாலத்தின் விரிசல்களின் வழியே உள்ளே சென்று, பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.

பாலத்தில் அரச செடிகளின் வேர்கள் உள்ளே நுழைவதால், அதன் ஆயுட்காலம் முடிவதற்குள் பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இந்த பாலம், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் இடையே உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து பாலமாக உள்ளது.

எனவே, மணல்மேடு பாலத்தில் பக்கவாட்டு சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai