sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருக்காலிமேடை புறக்கணிக்கும் துாய்மை பணியாளர்கள்

/

திருக்காலிமேடை புறக்கணிக்கும் துாய்மை பணியாளர்கள்

திருக்காலிமேடை புறக்கணிக்கும் துாய்மை பணியாளர்கள்

திருக்காலிமேடை புறக்கணிக்கும் துாய்மை பணியாளர்கள்


ADDED : ஜன 09, 2024 10:07 PM

Google News

ADDED : ஜன 09, 2024 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 51 வார்டுகளில் உள்ள வீடு மற்றும் கடைகளில் இருந்து சேகரமாகும் குப்பையை கொட்ட, பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டி, 2022ல் அகற்றப்பட்டு, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வாயிலாக தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு, பாலாஜி நகரில், ஒரு வாரம், 10- - 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்து வந்தனர்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக பாலாஜி நகருக்கு குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வருவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

இதனால், அப்பகுதியினர் சிந்தாமணி விநாயகர் கோவில் மற்றும் மின்மாற்றி அருகில் குப்பையை கொட்டுகின்றனர். நாள் கணக்கில் அகற்றப்படாத குப்பையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இப்பகுதிக்கு என நியமிக்கப்பட்டுள்ள துாய்மை பணியாளர்கள், பாலாஜி நகர் நுழைவு பகுதியான, சவுராஷ்டிரா தெருவில் வசிப்போரிடம் குப்பை சேகரித்ததாக, கையெழுத்து வாங்கிவிட்டு திரும்பி விடுகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்குபின், ஒரே ஒரு முறை மட்டுமே குப்பை சேகரிக்க வந்தனர். இதனால், இத்தெருக்களில் குப்பை குவியலாக உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, துாய்மை பணியாளர் தினமும் குப்பை சேகரிக்க வர வேண்டும் என, திருக்காலிமேடு பாலாஜி நகர் பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம்மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்மொழி கூறியதாவது:

திருக்காலிமேடு பாலாஜி நகர் பகுதியில், குப்பையை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் நீண்ட நாட்களாக வராமல் இருக்க வாய்ப்பு இல்லை.

இருப்பினும் இதுகுறித்து ஆய்வு செய்து, அப்பகுதியில் துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us