sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டேங்கர் லாரியில் சிக்கி விதிமீறிய மாணவர் பலி

/

டேங்கர் லாரியில் சிக்கி விதிமீறிய மாணவர் பலி

டேங்கர் லாரியில் சிக்கி விதிமீறிய மாணவர் பலி

டேங்கர் லாரியில் சிக்கி விதிமீறிய மாணவர் பலி


ADDED : ஜன 18, 2024 09:34 PM

Google News

ADDED : ஜன 18, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்:இருசக்கர வாகனத்தில் விதிமீறி பயணித்த பள்ளி மாணவர், டேங்கர் லாரியில் சிக்கி பலியானார்.

சென்னை, அம்பத்துார் அடுத்த ஐ.சி.எப்., காலனி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஜீவா, 17, அயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று காலை 8:00 மணியளவில், தன் உறவினரின், 'யமஹா ஆர் 15' ரக இருசக்கர வாகனத்தில், அம்பத்துார் தொழிற்பேட்டை மூன்றாவது பிரதான சாலையில் இருந்து, புழல் - -தாம்பரம் புறவழிச்சாலை வழியாக, வீட்டிற்குச் சென்றார். அப்போது, அரை அடி உயரம் கொண்ட சாலை தடுப்பின் மீது வேகமாக ஏறி, சாலையின் மறுபக்கத்திற்குச் செல்ல முயன்றார்.

ஆனால், இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில், அவர் சாலையில் விழுந்தார். அப்போது, அந்த இடத்தை கடந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர், தப்பிச் சென்றார். விபத்தின் போது, ஜீவா தலைக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us