sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கன்னியாகுமரி

/

மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது பலருக்கும் தொடர்பு

/

மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது பலருக்கும் தொடர்பு

மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது பலருக்கும் தொடர்பு

மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது பலருக்கும் தொடர்பு


ADDED : மார் 19, 2025 03:10 AM

Google News

ADDED : மார் 19, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்:இரண்டு மாணவிகள் மாயமாகி மீட்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சலை சேர்ந்த சகோதரிகளான இரண்டு மாணவிகள் இன்ஸ்டா காதலனை பார்ப்பதற்காக இரவில் தனியாக வந்தனர். அவர்களை பைக்கில் அழைத்துச்சென்ற வழக்கறிஞர் அஜித் குமார் தக்கலையில் தனது அலுவலகத்தில் வைத்து ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நான்கு நாட்களுக்கு பின்னர் மாணவிகள் மீட்கப்பட்ட நிலையில் அஜித் குமார் கைது செய்யப்பட்டு மாவுகட்டுடன் உள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அவரைப் பார்க்க இருவரும் புறப்பட்டுள்ளனர். இதற்காக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மற்றொரு இன்ஸ்டா நண்பர் மோகன் 30, உதவுவதாக கூறியுள்ளார். திருநெல்வேலியில் ஒரு வாடகை வீட்டில் இரண்டு மாணவிகளையும் அவர் தங்க வைத்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us