/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோரை புல் தோட்டத்தில் தீ போராடி தீயணைப்பு
/
கோரை புல் தோட்டத்தில் தீ போராடி தீயணைப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : வேலாயுதம்பாளையம் அருகே, கோரை புல் சாகுபடி செய்யப்பட்-டிருந்த தோட்டத்தில், தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் அருகே கோவில் பாளையம் பகுதியில், பாய் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோரை புல், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் கோரை புல் தோட்டத்தில் திடீ-ரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்-ததால், தீ அருகில் இருந்த தென்னை மரங்களுக்கும் பரவியது. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள், தீயை கட்டுப்-படுத்தி அணைத்தனர்.

