/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண்மை பல்கலை படிப்பு: விண்ணப்பிக்க நாளை வரை வாய்ப்பு
/
வேளாண்மை பல்கலை படிப்பு: விண்ணப்பிக்க நாளை வரை வாய்ப்பு
வேளாண்மை பல்கலை படிப்பு: விண்ணப்பிக்க நாளை வரை வாய்ப்பு
வேளாண்மை பல்கலை படிப்பு: விண்ணப்பிக்க நாளை வரை வாய்ப்பு
ADDED : ஜூன் 23, 2025 05:24 AM
கரூர்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்-ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை (கோவை) விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மூலம் வழங்கப்-படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறி-யியல் ஆகிய, மூன்று பட்ட படிப்புகளுக்கு, 2025-26ம் கல்வி-யாண்டில், 240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளது. கடந்த மே மாதம், 9 முதல் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மாண-வர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற நாளை வரை கால அவ-காசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளைக்குள் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்-கலை(கோவை) நேரிலும், 9488635077, 9486425076 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.