sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம்

/

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை செப்.,30க்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 26, 2025 02:14 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இளம் சாதனையாளர்களுக்கான, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

2025---26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இத்திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarships.gov.in சென்று, 2026ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும், பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது மொபைல் எண், ஆதார் விபரங்களை உள்ளீடு செய்வதுடன், உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us
      Arattai