sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செல்லாண்டியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

/

செல்லாண்டியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

செல்லாண்டியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

செல்லாண்டியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்


ADDED : மே 10, 2025 12:57 AM

Google News

ADDED : மே 10, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., பேரூர் உடையாபட்டியில் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த வாரம் கம்பம் நடப்பட்டு, முக்கிய நிர்வாகிகளுக்கு பூசாரிகள் காப்பு கட்டினர். அன்று முதல் இப்பகுதி மக்கள் செல்லாண்டியம்மனுக்கு, ஏழு நாட்கள் விரதம் இருந்து வழிபட்டு வந்தனர்.

முதல் நாள் திருவிழா கடந்த, 7 இரவு

அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், கரகம் சிறப்பு அலங்காரத்தில் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து கோவிலில் குடி புகுந்தது.

பின், பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செய்து வழிபட்டனர்.

நேற்று முன்தினம் காலை படுகளம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் செல்லாண்டியம்மன் கரகம் மற்றும் கம்பம் ஆகியவற்றை கங்கை கரைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு சுவாமிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடத்தி வைத்து விழாவை முடித்து வைத்தனர்.






      Dinamalar
      Follow us