/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.7.87 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
/
ரூ.7.87 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ADDED : ஜூன் 26, 2025 01:41 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 7.87 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் நடந்தது.
நொய்யல் அருகே சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய் , எள், நிலக்கடலை ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
நேற்று முன்தினம் நடத்த ஏலத்தில் விவசாயிகள், 319 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 61.69 ரூபாய், அதிகபட்சமாக, 76.60 ரூபாய், சராசரியாக, 75.40 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 10 ஆயிரத்து, 782 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 7 லட்சத்து, 87 ஆயிரத்து, 640 ரூபாய்க்கு விற்பனையானது.