sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயிர்களை சேதப்படுத்தும் மயில் கூட்டம் வருவாய் இழந்து விவசாயிகள் தவிப்பு

/

பயிர்களை சேதப்படுத்தும் மயில் கூட்டம் வருவாய் இழந்து விவசாயிகள் தவிப்பு

பயிர்களை சேதப்படுத்தும் மயில் கூட்டம் வருவாய் இழந்து விவசாயிகள் தவிப்பு

பயிர்களை சேதப்படுத்தும் மயில் கூட்டம் வருவாய் இழந்து விவசாயிகள் தவிப்பு


ADDED : ஜூன் 27, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பகுதியில் பயிரிட்டுள்ள மாதுளை உள்ளிட்ட பணப்பயிர்களை, மயில் கூட்டம் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.

அரவக்குறிச்சி யூனியனில், ஈசநத்தம், புதுார், பெரிய மஞ்சுவளி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் மாதுளை பயிரிட்டுள்ளனர். தற்போது, மாதுளை காய்களை நன்கு காய்த்து வருகின்றன. இந்நிலையில், கூட்டமாக வரும் மயில்கள் மாதுளம் பழங்களை கொத்தி சேதப்படுத்துவதால், ஏராளமான பழங்கள் தரையில் உதிர்ந்து வீணாகின்றன. இதனால் மாதுளை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் மயில்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கூட்டமாக வரும் மயில்கள், பழங்களை கொத்தி சேதப்படுத்துவதால், தரையில் விழுந்து விற்க முடியாமல் வீணாகின்றன. மாதுளை மட்டுமின்றி, முருங்கை மரத்தில் மயில்கள் வேகமாக வந்து அமர்வதால், கிளைகள் ஓடிந்து வீணாகின்றன. இதேபோல், கொய்யா தோப்புகளிலும் சேதப்படுத்துகின்றன. இதேநிலை நீடித்தால், இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. மயில்களை கட்டுப்படுத்த, அரசு விரைந்து நடவடிக்தை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us