/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனியார் நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவால் ஆர்.டி.ஓ., சீல்
/
தனியார் நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவால் ஆர்.டி.ஓ., சீல்
தனியார் நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவால் ஆர்.டி.ஓ., சீல்
தனியார் நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவால் ஆர்.டி.ஓ., சீல்
ADDED : ஜன 10, 2024 12:36 PM
குளித்தலை: குளித்தலை அடுத்த, புத்துார் பிரிவு ரோடு மேற்கு பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை, ஆர்.டி.ஓ., ரவி, டி.எஸ்.பி., செந்தில்குமார், தாசில்தார் மகுடேஸ்வரன், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்டோர், தனியாருக்கு சொந்தமான கட்டடங்களில் ஆய்வு செய்தனர். பின் கட்டடத்தின் கேட்டிற்கு ஆர்.டி.ஓ., ரவி சீல் வைத்து கூறுகையில்,''குளித்தலை நீதிமன்ற உத்தரவையடுத்து சீல் வைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதுகுறித்து, நிறுவன உரிமையாளரின் வக்கீல் ரவிஆனந்த பத்மநாதன் கூறியதாவது:
கடந்த 2003ல், ஜெர்மன் நேசனல் என்ற கம்பெனி பெயரில், ஹன்ஸ்மார்டின் என்பவர் இந்நிறுவனத்தை ஏற்படுத்தினார். இதில், ஸ்கிம்ப் ஆயுர்வேதிக் பி லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்குவதற்காக, 45 ஏக்கர் பரப்பளவில் நிலங்களை பெற்று, அதில் பல்வேறு கட்டடங்களை அமைத்தார். ஆயுர்வேதிக் நிறுவனம் நடத்தி, குழந்தைகளுக்கு இலவச கல்வி, சுகாதாரம், விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பங்கள் வழங்கும் நோக்கில் பல்வேறு வகையான கட்டடங்களை அமைத்துள்ளார். 2012 வரை பணிகளை செய்து கொண்டு இருக்கும் சூழலில், ஜெர்மன், சிங்கப்பூர் நாடுகளில் இதேபோன்ற நிறுவனங்களை நடத்துவதற்காக செல்லும் சூழல் ஏற்பட்டது.
இதனால் கேரளாவை சேர்ந்த ஒருவரை, இந்நிறுவனத்தை இயக்குவதற்காக இயக்குனராக பணி அமர்த்தினார். நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை முறையாக காண்பிக்காமலும், இயக்காமலும் நிறுவனத்திற்கு சொந்தமான, 8 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்துள்ளார்.
நிறுவன உரிமையாளர் சார்பில், குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இயக்குனராக இருந்த கேரளாவை சேர்ந்தவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்ததோடு, அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்று உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.

