sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'கடம்பவனேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறும்'

/

'கடம்பவனேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறும்'

'கடம்பவனேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறும்'

'கடம்பவனேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறும்'


ADDED : ஜன 14, 2024 11:38 AM

Google News

ADDED : ஜன 14, 2024 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், 150 ஆண்டுகளுக்கு மேலாக தை மாதத்தில் தைப்பூசம் நடந்து வந்தது. கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதால், தைப்பூசம் ரத்து செய்யப்படுவதாக, செயல் அலுவலர் சந்திரமோகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பா.ஜ.,வினர், சிவனடியார்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஹிந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன போஸ்டர் ஒட்டியும், தைப்பூச விழா நடத கோரியும் இருந்தனர். நகர பா.ஜ., சார்பில் கடந்த, 3ல் சுங்ககேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், குளித்தலை இந்து முன்னணி பொறுப்பாளர் தியாகராஜன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளும் 8 கோவில் சிவாச்சாரியார்களை அழைத்து, கூட்டம் போட்டு அவர்களுடைய முடிவுகள் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் திருச்சி மற்றும் திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையதுறை இணை ஆணையர்கள் பிரகாஷ், குமரதுரை ஆகியோர் தலைமையில், உதவி ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்கள், எட்டு கோவில் சிவாச்சாரியார்கள் கூட்டத்தில் உலக நன்மைக்காகவும், கிராமத்தில் உள்ள அனைத்து மக்கள் நலன் பெற வேண்டியும், தைப்பூச திருவிழா தீர்த்தவாரி வரும், 25ல் நடைபெற வேண்டும் என முதன்மை அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள், வழக்கு தொடுத்தவர் தீர்மானித்தனர்.

இதன்படி கடம்பவனேஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறும் என ஹிந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us