sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் வி.சி., அலுவலகம் திறப்பு; திருமாவளவன் பங்கேற்பு

/

குளித்தலையில் வி.சி., அலுவலகம் திறப்பு; திருமாவளவன் பங்கேற்பு

குளித்தலையில் வி.சி., அலுவலகம் திறப்பு; திருமாவளவன் பங்கேற்பு

குளித்தலையில் வி.சி., அலுவலகம் திறப்பு; திருமாவளவன் பங்கேற்பு


ADDED : மே 29, 2025 01:44 AM

Google News

ADDED : மே 29, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தை, நேற்று கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,' ஜூன் 14ம் தேதி திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற உள்ளதாகவும், மத்திய அரசை கண்டித்து நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள வேண்டும்' என்றார்.

இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளத்தை சேர்ந்த மறைந்த நிர்வாகி ராம்குமார் உருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின், காவல்காரன்பட்டி, பொய்யாமணி, வதியம் கிராமங்களில் கட்சி கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us