sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்

/

அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்

அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்

அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்


ADDED : மார் 26, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், முத்தமிழ் விழா, விளையாட்டு விழா மற்றும் கல்லுாரி ஆண்டு விழா என, முப்பெரும் விழா நேற்று துவங்கியது. ஆங்கில உதவி பேராசிரியர் கல்பனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.

திருப்பத்துார் துாய நெஞ்சக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவரும், முதுகலை பார்த்திப ராஜா பேசியதாவது:

உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத வகையில், தமிழ் மொழிக்கு மட்டுமே விழா எடுக்கின்றனர். தமிழ், மொழி அல்ல. அது ஒரு வரம். தமிழ் படித்தால் அறத்தின் வழியில் நிற்பீர்கள். தமிழை போல் உலகில் எந்த மொழியும் இல்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து, தமிழ் படித்து விட்டு போனவர்களும் சொல்லியுள்ளனர். நம் மூதாதையர்கள் பாதுகாத்து விட்டுச் சென்ற மொழியை, நாமும் காத்து வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும். தமிழன் ஒருவன் எப்போது தமிழில் பேசுவதை, எழுதுவதை விட்டு விடுகிறானோ, அப்போது தமிழ் மொழி அழியும். எனவே, தமிழ் மொழியை காப்போம், தமிழில் பேசுவோம், எழுதுவோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, கல்லுாரியில் நடந்த கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழ்த்துறை தலைவர், இணை பேராசிரியர் சிவகாமி மொழிப்புலம் செயலர் அனிதா மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us