ADDED : ஜூன் 23, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூரில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, மக்கள் மத்தியில் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகா மக-ரிஷி அறக்கட்டளை மகாயோகம் சார்பில், நேற்று காலை விழிப்பு-ணர்வு பேரணி நடந்தது.
ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மைதானத்தில் நிறைவு பெற்றது. ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்-கேற்றனர்.
யோகாசனத்தின் அவசியம் குறித்து, ஜெகதீசன் என்பவர் விளக்கி கூறினார். மாணவ, மாணவியர், இளைஞர்கள், பெரியர்கள் என பலரும், விளையாட்டு மைதானத்தில் யோகாசனம் செய்தனர். ஓசூர் பயிற்சி ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.