ADDED : மே 10, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதி யை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. தனியார் மருத்துவ மனையில், டிப்ளமோ நர்சிங் முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை.
அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், ஓசூர் தர்கா அண்ணாமலை நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.