ADDED : செப் 20, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ரோடு, ராசு வீதியை சேர்ந்தவர் முருகன், 49, கூலித்தொழிலாளி. சொத்து பிரிப்பதில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இவரது மருமகன் வினோத், 25, என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
கடந்த, 17ல், குடிபோதையில் முருகன் வீட்டிற்கு வந்த வினோத், அவரை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகார்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து, வினோத்தை கைது செய்தனர்.

