sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

750 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி

/

750 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி

750 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி

750 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி


ADDED : செப் 21, 2025 01:29 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த ஜூலை, 9ம் தேதி, கருவுற்று, 25 வாரங்களான கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, 750 கிராம் எடையில் குழந்தை பிறந்தது. பிரசவ காலத்திற்கு முன்

கூட்டியே குழந்தை பிறந்ததால், சுவாச பிரச்னை, நோய் தொற்று மட்டுமின்றி, மூளையில் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்க, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், 24 மணி நேரமும் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர் சிகிச்சையால், குழந்தைக்கு எவ்வித சுவாச பிரச்னை, பார்வை குறைபாடு மற்றும் நோய் தொற்று ஏற்படவில்லை. ஒரு கிலோ, 500 கிராம் எடையுடன், குழந்தை தாய்ப்பால் குடிக்க ஆரம்பித்தது. அதனால், கடந்த சில நாட்களுக்கு முன், தாய்,

சேய் இருவரும், பத்திரமாக வீடு திரும்பினர். இந்த சவாலான சூழ்நிலையை திறம்பட கையாண்ட மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை மருத்துவர்கள் மற்றும் செவிலி

யர்களுக்கு, மருத்துவக்கல்லுாரி செயலாளர் லாசியா தம்பிதுரை, முதல்வர் ராஜா முத்தையா, மருத்துவ அலுவலர் கிரீஷ் ஓங்கல், இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி

ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us