ADDED : செப் 15, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியை சேர்ந்தவர், 18 வயது சிறுவன். கடந்த, 12ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார். இரவில் அவர் திரும்பி வராததால், தாய் பரிமளா, 41, மத்திகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.
சூளகிரி அருகே கோபசந்திரத்தை சேர்ந்தவர் திருமல்லேஷ், 42. கட்டட தொழிலாளி; கடந்த, 11ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி வனிதா, 38, புகார்படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.