sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு

/

காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு

காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு

காருக்குள் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி : ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் அமர்ந்து குழந்தைகள் 4 பேர் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர்.10 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும் நீண்ட நேரம் காருக்குள் சிக்கி, மூச்சு திணறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உதய் 8, சாருமதி 8, சாரிஷ்மா 6, மானஸ்வி 6, என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், பெற்றோர் அவர்களைத் தேடத் தொடங்கினர். அப்போது குழந்தைகள் காருக்குள் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

3 பேர் பலி: ஆந்திராவின் சித்துார் மாவட்டத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூன்று குழந்தைகள் மூழ்கி இறந்தனர்.

இறந்தவர்கள் ஷாலினி 5, அஸ்வின் 6, கவுதமி 8, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar