
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன், 68, விவசாயி. இவர் ஜன.16ம் தேதி மனைவி விசாலாட்சியுடன் சிதம்பரத்தில் உள்ள இரண்டாவது மகள் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மக்கள் அளித்த தகவலின்படி, சுப்புராயன் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகை மற்றும் 70,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.
விருத்தாசலம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

