ADDED : ஜன 24, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் பகுதிகளில் இம்மாத துவக்கத்தில் பெய்த மழையால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வயலிலேயே நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். அணைக்கரைபட்டி விவசாயிகள் பலர் முளைத்த நெல் பயிர்களுடன் தாலுகா அலுவலகம் வந்தனர்.
துணை தாசில்தார் மயிலேறிநாதனிடம் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

