நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நகர் மருத்துவர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் திருமலைராயர் படித்துறைத் தெரு சங்க அலுவலகத்தில் நடந்தது.
தலைவராக சண்முகம், துணைத் தலைவர்களாக சுந்தரமூர்த்தி, கதிர்வேல், ஆறுமுகம், கதிரேசன், செயலாளராக நாகனாதன், துணைச் செயலாளர்களாக பாண்டியராஜன், முருகன், ஜெயபால், சக்திவேல், பொருளாளராக சம்பத், சட்ட ஆலோசகராக சுந்தரவடிவேல், ஆலோசகர்களாக குப்புசாமி, போஸ் தேர்தெடுக்கப்பட்டனர்.
பொது இடங்களில் தியாகி விஸ்வநாததாஸ் உருவச் சிலையை நிறுவ வேண்டும். முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு மானியத்துடன் கடன் வழங்க அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.