/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு மைதானம் ஜன. 24ல் முதல்வர் திறப்பு
/
ஜல்லிக்கட்டு மைதானம் ஜன. 24ல் முதல்வர் திறப்பு
ADDED : ஜன 21, 2024 07:25 AM
மதுரை : மதுரை மாவட்டம், கீழக்கரையில், 45 கோடி ரூபாயில் கருணாநிதி நுாற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஜன. 24ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அன்று முதல் ஜன. 28 வரை 5 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது திறப்பு விழா நாளான ஜன. 24ம் தேதி மட்டுமே போட்டி நடத்த முடிவு செய்துள்ளனர்.
போட்டியில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் பதிவு ஆன்லைனில் துவங்கியது. நேற்று முன்தினம் மதியம் துவங்கி, நேற்று மதியம் வரை பதிவு நடந்தது.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9,000த்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,300த்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர்.

